காதல் எல்லோரும்தான் புரிகிறார்கள்
ஆனால் வித்தியாசம் இதுதான்
சிலர் உயிரைக்கொடுத்து காதல் புரிகிறார்கள்
சிலரை உயிரை வாங்குகிறார்கள்
மறப்பதற்கல்ல நட்பு
பிரிவதற்கல்ல நண்பர்கள்
நட்பு தரும் ஆனந்தம் எம்மாத்திரமெனில்
உனக்கு அழுவதற்கு கூட நேரம் கிடைக்காது போகும்.
இப்போது நான் தலைபோகும் அவசரத்தில் இருக்கிறேன்,
ஓய்வாக இருக்கும்போது யோசித்துச் சொல்கிறேன்
உன்னை நினைவில் கொள்ளும்போது நான்
எதை எதையெல்லாம் மறந்து போகின்றேன் என்று…
- மிர்ஸா காலிப்
Maine tho yun hi Raakh mein
Feri thi ungliyaan
Dekha jo gaur se
Teri tasveer ban gayi
- Saleem Betab
விளையாட்டாய் சாம்பலைப் பரப்பி
வெறும் விரலால்தான் துழாவினேன்
விரைந்து பார்த்ததில் உன்
வியத்தகு ஓவியம் !!
– சலீம் பேதாப்
சிரிக்கும் மனதுக்குள் சோகமும் உண்டு
புன்னகைக்கும் கண்களில் ஈரமும் உண்டு
உன் சிரிப்பு என்றென்றும் நிலைத்திருக்க இறைஞ்சுவேன் நான்
ஏனெனில்.. உன் புன்னகையைக் கண்டு
பித்து பிடித்தவர்களில் அடியேனும் ஒருவன்
Ab judaai ke safar ko
Mere asaan karo
Tum mujhe khwaab me aakar na
Pareshan karo
- Munawwar Rana
கண்ணே !
நீ பரிசளித்த பிரிவின் பயணத்தை
இலகுவாக்க மாட்டாயா?
கனவிலும் ஏன் வந்து
என்னை காயப்படுத்துகிறாய்?
Dushmanon ne kya
Dushmani ki hai
Doston ne bhi kya
Kami ki hai
- Habib Jalib
எதிரிகள் புரிந்த துரோகங்கள்தான்
எத்தனை எத்தனை?
நண்பர்களும் புரிந்ததும்
ஒன்றும் குறைச்சலில்லையே !
Shaakhon se toot
Jaayen wo pattey
Nahin hey hum
Aandhi se koi kehde
Ke Auqat me Rahe
- Rahat Indori
கிளையோடு உதிரும்
இலை அல்ல நான் !
அந்த சூறைகாற்றிடம் சொல்லி வையுங்கள்
அதன் தராதரம் அறிந்து நடந்துக் கொள்ள !
இப்படி மாட்டிக் கொண்டு முழிப்பதற்கு
யாரைத்தான் நான் குற்றம் சொல்வது?
ஒருவரா? இருவரா?
எத்தனையோ பேர்கள் வந்தார்களே
என் கல்யாணத்தின்போது அட்சதை போட !!
- கவி ராஹத் இந்தோரி
என் மனதை நெருடிய உருது கவிதை வரிகள் சிலவற்றை மொழிபெயர்த்து பகிர்ந்தால் என்னவென்று என் மனதில் தோன்றியது. என்னால் வார்த்தைகளை மட்டுமே மொழிபெயர்க்க முடிந்ததே தவிர அதன் இயல்பான சாரத்தை (Essence) கொண்டுவர முடியவில்லை,
—————–
உருது கவிதை மொழிபெயர்ப்பு – 1
கஃபன் துணிதான்
எத்தனை வேடிக்கையானதொரு சாதனம்?
தயாரித்தவன் எவனோ
அதை அவன் விற்றும் விட்டான் 1
வாங்கியவன் எவனோ அவனும் அதை
பயன்படுத்தாமல் விட்டு விட்டான் !
பயன்படுத்தியவன் எவனோ
அதன் பயன் அவனுக்கு தெரியாமலேயே போய்விட்டது 11
கஃபன் துணிதான்
எத்தனை வேடிக்கையானதொரு சாதனம்?
(கஃபன் துணி = சடலத்துணி/ பிண ஆடை)
Kaffan bi kya ajeeb cheez hey
Jisne banaya usney bech diya
Khareedne wale ney isthimaal nahi kiya
Aur jisney isthimaal kiya
Usey maalum hi nahin
உருது கவிதை மொழிபெயர்ப்பு – 2
மெளனத்தை விடச் சிறந்த இறைவழிபாடு
உலகில் வேறெதுவும் கிடையாது !
இதை வானவர்களுக்கு
தங்கள் புண்ணிய பதிவேட்டில்
எப்படி வரவு வைக்கணும் என்ற விவரம் புரியாது !
ஷைத்தானுக்கு இந்த வணக்கத்தை
எப்படி வழிகெடுப்பது என்ற சூட்சமம் தெரியாது !
இறைவன் ஒருவனை அன்றி
இந்த மெளன வணக்கத்தின் சாரத்தை
யாராலும் புரிந்துக் கொள்ளவும் முடியாது !
உருது கவிதை மொழிபெயர்ப்பு – 3
Shukhr karkey Soya karo
Khudha Subhe utneka mokha
Har kisiko nahin detha
உறங்குவதற்கு முன்பு
படைத்தவனுக்கு நன்றி கூறி உறங்குவீராக !
ஏனெனில் … இறைவன்
அடுத்த நாள் விழிப்பதற்கான சந்தர்ப்பத்தை
எல்லோருக்கும் அளித்து விடுவதில்லை !!
#அப்துல்கையூம்
உருது கவிதை மொழிபெயர்ப்பு – 4
Aakhri Aaina bhi Thod diya
Meri thanhayi ab Muqammal hogaya
கடைசியில்…
எஞ்சியிருந்த என் கண்ணாடியையும்
எடுத்து உடைத்து விட்டேன் !
என் தனிமை இப்போது
முழுமை பெற்று விட்டது !
#அப்துல்கையூம்
உருது கவிதை மொழிபெயர்ப்பு – 5
மனிதன் சில சமயம்
மெய்யாலுமே தோற்று விடுகிறான் !
மெளனம் சாதித்து சாதித்தே…..
பொறுமையை கடைபிடித்து கடைபிடித்தே…
நம்பிக்கையை வைத்து வைத்தே….
உறவுச் சுமைகளை நிவர்த்திச் செய்தே…
உண்மைகளுக்கு விளக்கம் கொடுத்தே…
தனக்குத்தானே சமாதானம் சொல்லிச் சொல்லியே
சிலசிமயம் தனக்குத்தானே !
(தோற்றும் விடுகிறான்)
#அப்துல்கையூம்
Insaan waqai haar jaathaa hey
Kamosh Rahete Rahete
Sabar Karte karte
Umidey Rakhte Rakhte
Rishtey Nibathey Nibathey
Safaayiyaan Dethey Dethey
Aur Apnoko Manathey manathey
Aur Kabhi kabhi khudsey
உருது கவிதை மொழிபெயர்ப்பு – 6
உண்ணும் உணவு வயிற்றுக்குள் போவதற்குள்
எத்தனை எத்தனை நுணுக்கங்கள்
இறைவனவன் வைத்துள்ளான் !
சூடாக இருந்தால்
கைகளுக்குத் தெரிந்து விடும்
கடினமாக இருந்தால்
பற்களுக்குப் புரிந்துவிடும்
கசப்போ துவர்ப்போ
நாவுக்கு தெரிந்துவிடும்
கெட்டுப் போயிருந்தால்
மூக்கு முகர்ந்துவிடும்
ஆனால் ஒன்று…
உணவு வந்த முறை
ஹலாலா? ஹராமா?
உழைத்துச் சம்பாதித்ததா?
ஊரை அடித்து உலையில் போட்டதா?
முறையானதா? முறையற்றதா?
முடிவு செய்ய வேண்டியது நீதான்..
#அப்துல்கையூம்
உருது கவிதை மொழிபெயர்ப்பு – 7
====================================
நீ… உன்னை நீயே
நடுக்கடல்போல் மாற்றிக்கொள் !
இத்தனை வடிகால்களையும்
ஏற்றுக்கொண்டபின்
ஆர்ப்பரிக்காத நீரலைகளுடன்
அமைதியாக இருப்பதை நீயே பார் !
உருது கவிதை மொழிபெயர்ப்பு – 8
====================================
இன்பத்தை எங்ஙனம்
இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டாயோ
அதுபோல
துன்பத்தையும் துவண்டு விடாமல்
துணிவுடன் தோளில் தாங்கு !
ஏனெனில் இரண்டும் உன்னை
இயல்பாக சோதிப்பதற்காகவே
இறைவனால் அனுப்பபட்டது !!
உருது கவிதை மொழிபெயர்ப்பு – 9
====================================
Kisisey itni Nafrat na karo
Ke kabhi milna padey tho
Milna sakho
Kisise itni mohabath na karo
Ke kabhi Tanha jeena padey tho
Jeena sakho
அளவுக்கு மீறி
யாரையும் வெறுக்கவும் வெறுக்காதே !
எப்போதாவது மீண்டும் சந்திக்கவிருந்தால்
அவர்களை சந்திக்கவும் முடியாத அளவுக்கு !
அளவுக்கு மீறி
யார் மீதும் பிரியமும் வைக்காதே !
எப்போதாவது அவர்களை பிரிய நேரிட்டால்
அவர்களைப் பிரிந்து வாழ முடியாத அளவுக்கு !
உருது கவிதை மொழிபெயர்ப்பு – 10
=======================================
ஹா.. ஹா… ஹா…!
மனிதன்தான் எத்தனை விசித்திரமானவன் !
நினைவுகளை மட்டும்
நெஞ்சில் பூட்டிக் கொள்கிறான் !
நினைவு தந்தவர்களை
மறந்தே போய்விடுகிறான் !!
உருது கவிதை மொழிபெயர்ப்பு – 11
=======================================
நமது சமூகத்தில்
செல்வந்தர் வீட்டுப் பிள்ளைகளின்
விஷமத்தனத்தைக் கூட
வெகுளித்தன குறும்பு என்கிறார்கள் !
ஏழை வீட்டுப் பிள்ளைகளின்
வெகுளியான குறும்புகளைக்கூட
விஷமத்தனம் என்கிறார்கள் !
உருது கவிதை மொழிபெயர்ப்பு – 11
======================================
இத்தனை வார்த்தைகள் நம் மொழியில்
இருந்திட்ட போதிலும்
சில சமயம் வார்த்தைகளே இல்லாமல்
போய்விடுகின்றன
ஆம்.. உண்மை !
சில வேளைகளில்
சில மனிதர்களுக்கு
ஆறுதல் சொல்ல முனையும்போது !
உருது கவிதை மொழிபெயர்ப்பு – 12
========================================
எல்லாமே எண்ணத்தைப் பொறுத்துதான் நண்பா !
கஃபாவை தரிசித்த பிறகும்
வெறுங் கையோடு திரும்புபவர் உண்டு!
வீட்டினில் இருந்தபடியே
வேண்டிய அளவுக்கு
ஆண்டவன் அருளை
அள்ளிக் கொள்வோரும் உண்டு!
உருது கவிதை மொழிபெயர்ப்பு – 13
=====================================
விசித்திரமான உலகம் இது !
நாம் நடை பயிலும்போது
தடுக்கி விழாமல் தாங்கிப் பிடிக்கும்
உலகம்தான் பிற்பாடு
நடக்கத் தொடங்கி நடையாய் நடக்கையில்
எப்போது தடுக்கி விழுவோம் என
எதிர்பார்த்து காத்துக் கிடக்கிறது !
#அப்துல்கையூம்
உருது கவிதை மொழிபெயர்ப்பு – 14
=====================================
தீக்குச்சிகள் எல்லாமே பார்ப்பதற்கு
ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன
சிலதுகள் தீபத்தை கொளுத்துகின்றன
சிலதுகள் சொந்த வீட்டை
உருது கவிதை மொழிபெயர்ப்பு – 15
=====================================
வாழ்க்கை எல்லோருக்கும் பாரபட்சமின்றி
வாய்ப்பினை வழங்கத்தான் செய்கிறது
சிலர் பிடுங்கிக் கொள்கிறார்கள்!
சிலர் தவற விட்டு விடுகிறார்கள்!
சிலர் சோம்பலால் வாங்க மறுத்துவிடுகிறார்கள்!
#அப்துல்கையூம்
உருது கவிதை மொழிபெயர்ப்பு – 15
=====================================
உன் சந்தோஷ நேரத்தில்
யார் உன் நினைவில் வருகிறாரோ – அவர்
நீ விரும்பும் நபரென்று கருதிக் கொள் !
உன் துக்கத்தின் பிடியில்
யார் உன் நினைவில் வருகிறாரோ -,அவர்
உன்னை விரும்பும் நபர் என்று கருதிக்கொள் !
#அப்துல்கையூம்
உருது கவிதை மொழிபெயர்ப்பு – 16
=====================================
இடர்களை எதிர்கொள்பவர்கள்
வரலாறு படைக்கின்றனர் !
எதிர்கொள்ளத் துணிவில்லாதவர்கள்-வெறும்
வரலாறு படிக்கின்றனர் !
#அப்துல்கையூம்
உருது கவிதை மொழிபெயர்ப்பு – 17
====================================
கால் இடறி விழுவதைக்கண்டு
கை கொட்டிச் சிரிக்கிறார்கள் – அவன்
தலையில் எத்தனை சுமை என்பதை
தப்பித்தவறி ஏறெடுத்தும் பார்ப்பதில்லை !
#அப்துல்கையூம்
உருது கவிதை மொழிபெயர்ப்பு – 18
=====================================
நல்லவேளை
நன்றி கூறுங்கள் எனக்கு !
படும் வேதனைகளை எல்லாம்
பக்கங்களில் வடிக்காததற்கு
அப்படி பதியத் தொடங்கினால்
அத்தனை காகிதங்களிலும்
வார்த்தைகள் கஃபன் அணிந்து
வலம் வந்துக் கொண்டிருக்கும்
ஜனாஸாக்களாக!!
#அப்துல்கையூம்
பூமிக்கு வெகுதூரம்….
வானத்திற்கு அப்பால்…..
சொர்க்கத்தையும்
நரகத்தையும் தேடிக்கொண்டிருந்தேன்.
உள்ளுக்குள்ளே கேட்டது
ஒர் அசரீரி சப்தம்
“உனக்குள்ளேயே இருக்கிறது
சொர்க்கமும்…. நரகமும்….!!”
– உமர் கய்யாம்
சீக்கிரம் கோப்பையை காலியாக்கு!
ஏனெனில்
எங்கிருந்து நீ வந்தாய் என்பதும்
தெரியாது உனக்கு !
எதற்காக வந்தாய் என்பதும்
தெரியாது உனக்கு !
சீக்கிரம் குடித்து விடு !
ஏனெனில்
எதற்கு போகிறாய் என்பதும்
தெரியாது உனக்கு !
எங்கே போகிறாய் என்பதும்
எதுவும் தெரியாது உனக்கு !!
- உமர் கய்யாம்
எங்கள் இறைவா!
ஏழ்மையில் வாழுகிறோம் நாங்கள் !
இன்பமின்றி துன்பத்தில் துவளுகிறோம் நாங்கள் !
எள்ளி நகையாடப்படுகிறோம் பிறரால்
உனக்காகவே வாழ்ந்து
உனக்காகவே உயிர்விட
சித்தமாகியிருக்கும் எங்களுக்கு
நீ அளிக்கும் பரிசு இதுதானா..?
மாற்றாரின் உலகமாக மாறிவிட்டது
இந்த மண்ணுலகம் !
எங்களைப் பொறுத்த வரையில்
வெறும் கனவுலகம், கற்பனை உலகம்தான்
கடைசியில் மிஞ்சியிருக்கிறது !
வெற்று ஜடமாய் அவனியில்
நாங்கள் மட்டும் இன்னும்
நடைப்பிணமாய் நடமாடுகிறோம் !
ஏ ! எங்கள் இறைவா !
இரக்கம் கொள் ! இன்முகம் காட்டு !
புத்துணர்வு கண்டு புதுவாழ்வு வாழ
படைத்தோனே உதவி செய் !
கவிஞர் அல்லாமா இக்பால்