எத்தனை முறை சொன்னாலும்
இரவுக்கு வராது புத்தி !
மதியாதார் வாசலை
மிதியாதே என்பது
இரவுக்குத் தெரியாதோ?
சூடு சொரணை சற்றும்
இல்லாமல் போனதோ?
ஆண்டாண்டு காலமாய்
அவமானப் பட்டாலும்
அதற்கு உரைக்காது போலும் !
ஒவ்வொரு நாளும்
இரவை விரட்டியடிக்கிறான் சூரியன்!
இருளைக் கிழித்துப் போடுகிறான்!
வெளிச்சத்தால் துரத்தி அடிக்கிறான் !
இருந்தும் ஒவ்வொரு நாளும்
திரும்பத் திரும்ப
திரும்பத் திரும்ப
எட்டிப் பார்க்கிறது
வெட்கங்கெட்ட இரவு.!!