புள்ளி மானாய்த்
துள்ளித் திரிந்த
பள்ளிக்கால நினைவுகளை
உள்ளத்திலிருந்து இன்னும்
தள்ளிக் கூட வைக்கவில்லை
அதற்குள்…
வெள்ளி நரையை
அள்ளியள்ளித் தந்து விட்டு
எள்ளி நகையாடிவிட்டு
நில்லாது ஓடியது
பொல்லாத காலம் !
புள்ளி மானாய்த்
துள்ளித் திரிந்த
பள்ளிக்கால நினைவுகளை
உள்ளத்திலிருந்து இன்னும்
தள்ளிக் கூட வைக்கவில்லை
அதற்குள்…
வெள்ளி நரையை
அள்ளியள்ளித் தந்து விட்டு
எள்ளி நகையாடிவிட்டு
நில்லாது ஓடியது
பொல்லாத காலம் !